மின்சாரம் தாக்கி நெல் வியாபாரி பலி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் வியாபாரி பலியானார்.;

Update: 2025-08-15 04:06 GMT
மதுரை மாவட்டம் வாலாந்துார் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாண்டி( 45) என்பவர் நெல் வியாபாரி. இவர் தனது வீட்டில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் நேற்று முன்தினம் (ஆக.13) இரவு வீட்டில் லைட் போட சென்ற போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வாலாந்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News