தேசியக்கொடி ஏற்றிய நகராட்சி தலைவர்
மதுரை மேலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் தேசிய கொடி ஏற்றினார்;
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை யொட்டி மேலூர் நகராட்சி அலுவலகத்தில் மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மேலூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி,பொறியாளர் முத்துக்குமார், நகர் மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், சுகாதார ஆய்வாளர் தினேஷ் குமார், மேலாளர் மாதவன், நகர் மன்ற உறுப்பினர்கள், ஓவர்சியர் உலகநாதன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.