பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா;
மதுராந்தகத்தில் ஜே ஜே அறக்கட்டளை சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் ஜே ஜே அறக்கட்டளை சார்பில் ஐம்பெரும் விழா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜெர்லின் ஜோஸ் செயலாளர் ஞானசாந்தி ஆகியோர் ஏற்பாட்டில் கடந்த கல்வியாண்டில் மதுராந்தகம் நகராட்சி 12,13,14 மற்றும் 15 வார்டுகளில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நலிவடைந்த குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கவிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.