கன்னியாகுமரி : நகை மதிப்பீட்டாளர் மீது வழக்குப்பதிவு

ரூ 57. லட்சம் மோசடி;

Update: 2025-08-16 05:15 GMT
நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை நகை மதிப்பீட்டாளராக வேலை செய்தவர் செல்வம்(40). இவர் நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர். இவர் இந்த வங்கியில் பணிபுரிந்த காலத்தில் ரூ.57 லட்சத்து 61 ஆயிரம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது வங்கியின் தணிக்கை ஊழியர்கள் தணிக்கை செய்த போது தெரிய வந்தது. தற்போது செல்வம் பணியில் இல்லை. மோசடி பணத்தை வங்கி நிர்வாகம் சார்பில் திரும்ப கேட்டால், அவர் கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து வங்கியின் மேலாளர் செந்தில்குமார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் செல்வம் மீது வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News