தாய் கண்டிப்பு. மகள் தற்கொலை
மதுரை அருகே தாய் கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை வடபழஞ்சி பல்கலை நகரில் வசிக்கும் மலைச்சாமியின் மகள் மகாலட்சுமி( 17) என்பவர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் வீட்டில் எந்த வித வேலையும் பார்க்காமல் எப்பொழுதும் செல்போனையே பார்த்துக் கொண்டிருப்பதால் இவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த மகாலட்சுமி நேற்று (ஆக.16) காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.