ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழா

விழா;

Update: 2025-08-18 04:31 GMT
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவை யொட்டி, மாயவன் தலைமையிலான பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி, முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தனர். அப்போது, குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. யாதவர் சங்க தலைவர் ரவி, செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ராவணன், ரங்கநாதன், செந்தில்முருகன், சவுந்தர்ராஜன், குகன், ஏழுமலை, மாயக்கண்ணன், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News