ரிஷிவந்தியம் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேன் அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.