உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை

மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...;

Update: 2025-08-22 16:50 GMT
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை... மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் காலநிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து மதியம் முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீர் கனமழை பெய்தது. குறிப்பாக உதகை சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மார்க்கெட், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக மலைத்தோட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News