கொல்லங்கோடு : மனவளர்ச்சி குன்றிய சிறுவன் சாவு

கன்னியாகுமரி;

Update: 2025-08-29 15:11 GMT
குமரி மாவட்டம்  கொல்லங்கோடு அருகே வெங்கஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஷாஜு என்ற  கூலி தொழிலாளியின்   13 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு  நேற்று இரவு வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. குடும்பத்தார் உடனடியாக மெடிக்கல் ஸ்டோரிலிருந்து மருந்து வாங்கி கொடுத்து தூங்க வைத்துள்ளனர். இன்று காலையில் மகன் அசைவில்லாமல் படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது  தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Similar News