மாணவர் காங்கிரஸ் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்

புதுக்கடை;

Update: 2025-09-01 05:49 GMT
மத்திய பாரதிய ஜனதா அரசு முறைகேடாக தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றசாட்டை முன்வைத்தும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கேட்டும் குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுக்கடை தபால் நிலையத்தில் இந்திய குடியரசு தலைவருக்கு தபால் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாணவர் காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்ட தலைவர் அஸ்விந்த் தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம் எல் ஏ தபால் அனுப்பும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், முஞ்சிறை வட்டார காங்கிரஸ் தலைவர் ரெகுபதி, மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News