குமரி மாவட்டம் மாங்காலை என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெபீஸ் (36). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது மனைவி ஸ்ரீகலா பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் ஜெபிஸ் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் குடிப்பழத்திற்கு அடிமையானதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.