உலக தென்னை தினம்: ஆழியார் ஆராய்ச்சி நிலையத்தில் கலந்தாய்வு !
உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் கலந்தாய்வு நடைபெற்றது.;
உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் கலந்தாய்வு நடைபெற்றது. வெப்பநிலை மாற்றம், பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு அதிகரித்து வருவதாகவும், இதனை சமாளிக்க ஊடுபயிர்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி குறித்து நிபுணர்கள் வழிகாட்டினர். கண்காட்சியில் பல்வேறு தென்னை ரகங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.