குளியறையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

தக்கலை;

Update: 2025-09-04 10:28 GMT
குமரி மாவட்டம்  தக்கலை அருகே இரவிபுதூர் கடை பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம் மனைவி சுகராபிவி (76) கணவர் இறந்து விட்டதால் மூதாட்டி தனியாக வசித்து வந்தார்.  நேற்று  உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சுகரா பீவி  குளியல் அறையில் அருகே நிலையில் குணமாக கிடந்ததை கண்டனர். இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்து மூதாட்டி என் மருமகன் ஜகபர் சாதிக் என்பவர் தக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News