குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 60 ஆண்டுகளாக ஆயுத பூஜை விழா நடந்து வந்தது. இந்த நிலையில் வரும் ஒன்றாம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு போக்குவரத்து கழக பணிமனையில் ஆயுத பூஜை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே ஆயுத பூஜை நடத்த வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பி எம் எஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் சந்திரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.