குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜையன் ( 78). இவர் மனைவியுடன் 2 வது மகள் இன்ப சுதா என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். இது இன்ப சுதாவின் கணவரான செல்வன் (52) என்பவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜையன் வீட்டில் இருந்தபோது மருமகன் செல்வன் அவரை தாக்கி காயப்படுத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜையனை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.