ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை மிஷன் உறுதிமொழி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை மிஷன் உறுதிமொழி;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை மிஷன் உறுதிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (19.09.2025) தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில், தூய்மை மிஷன் கழிவு சேகரிப்பு இயக்க உறுதிமொழி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி ஆர். ஐஸ்வர்யா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. சேதுராலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.