சங்கரன்கோவிலில் கழிவு சேகரிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது
கழிவு சேகரிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகத்தில் வைத்து 2.0 கழிவு நீர் சேகரிப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், சங்கரன்கோவில் கோட்டாட்சித்தலைவர் கவிதா, நகராட்சி சேர்மன் கௌசல்யா, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.