ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..

ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..;

Update: 2025-09-20 14:48 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் வெள்ளி காப்பு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News