குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அம்பலகடை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவர். வாடகை வீட்டில் தனியாக க்கு தங்கி இருந்தார். நேற்று அவர் வீட்டுமாடியில் இருந்து கீழே தவறி விழுந்து, இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார். அந்த வழியாக சென்ற போது மக்கள் பார்த்து மார்த்தாண்டம் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.