தொப்பம்பட்டி: “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூத்தம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்;
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூத்தம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இன்றைய தினம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூத்தம்பூண்டி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 30 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா, குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.