திருமயம் அருகே உள்ள லேனா விளக்கிலிருந்து புலிவலத்திற்கு கிருஷ்ணானந்தம் (60) பைக்கில் சென்றுள்ளார். அப்போது லேனா விளக்கு சாலையில் அவருக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மகன் பிரபாகரன் அளித்த புகாரில் நமண சமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.