பொன்னமராவதி; ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம், விஷம் குடித்து தற்கொலை
துயரச் செய்திகள்;
பொன்னமராவதி வலையப்பட்டியை சேர்ந்தவர் அன்புசெழியன் (55). இவர் ஆன்லைன் வர்த்தக தொழில் செய்து வந்த நிலையில் அதில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்ட நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக நேற்று வலையபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மேகலா (46) அளித்த புகாரில் பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.