புதுக்கோட்டை மாவட்டநாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று (செப்.,27) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும், மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.