புதுகை கலெக்டர் அலுவலகம் 100ஏக்கர் பரப்பளவு கொண்டது. வளாகத்தில் 1000க்கணக்கான மயில்கள் புகலிடமாக கொண்டு வாழ்ந்து வருகிறது. நேற்று பெய்தமழையின் காரணமாக இந்த பகுதி குளுகுளு சூழலுடன் வானமும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மயில்களுக்கு பன்றிகள், நாய்கள் ஆகியவை அச்சுறுத்தலாக உள்ளது. இந்த மயில்களை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு சரணாலயம் அமைக்க வனஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.