புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ் நகர் அரசு உதவிபெறும் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் பள்ளிவாசல் அருகில் தூய்மைப்படுத்தும் முகாம் இன்று (செப்.28) நடைபெற்றது. முன்னதாக மாநகராட்சி கவுன்சிலர் கவிவேந்தன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சேவியர் தலைமையில் மாணவர்கள் அந்தப் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.