இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் - கரூர் நெரிசல் சம்பவத்துக்கு விஜய் இரங்கல்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என விஜய் தெரிவித்துள்ளார்.