புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, சேவுகன் தெரு கருமாலித்தெரு, கண்டியன் தெரு, பிலா விடுதி ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு மின்சாரத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தடை இன்றி மின்சாரம் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மின்சார துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.