புதுக்கோட்டை மாநகராட்சி உலக இருதய தினத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய வாக்கத்தான் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேரணி கீழ ராஜ வீதி வழியாக நகர்மன்றம் சென்றடைந்தனர். இந்நிகழ்வில் மேயர் திலகவதி உடன் இருந்தனர்.