புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த சிலட்டூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.