திருமயம் அருகே உள்ள லேனா விளக்கு விநாயகர் கோவில் அருகே நாகராஜ் (20),முத்து மணி(31),பாண்டி அழகு (26) ஆகிய மூவரும் நேற்று (அக்.3) கஞ்சா பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நமண சமுத்திரம் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 320 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொருள், ரூ.3300, ஆண்ட்ராய்டு மொபைல் 2-யும் பறிமுதல் செய்தனர்.