புதுகை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காமராஜபுரம், போஸ் நகர், மச்சுவாடி, திருக்கோகர்ணம், திருவப்பூர், சிப்காட், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று இரவு பெய்த லேசான மழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் இன்று பெய்த மழையால் மேலும் மகிழ்ச்சி அடைந்தனர்.