பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்;
தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை தொடர் விடுமுறை முடிந்துள்ளதால் தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை முதலே அலுவலகம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் இன்று அதிகாலை முதலே போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் பெங்களூர், திருப்பூர், சென்னை உள்ளிட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.