மரகதப்புரிஅருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். அக்கா தம்பி படுகாயம்.
மரகதப்புரிஅருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். அக்கா தம்பி படுகாயம்.;
மரகதப்புரிஅருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். அக்கா தம்பி படுகாயம். கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா முன்னூர் அருகே ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சிபிராஜா வயது 15. இவரது சகோதரி கவி பிரியா வயது 18. இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:35 மணி அளவில் நொய்யல்-பரமத்தி சாலையில் மரகதபுரி அருகே சென்று கொண்டிருந்தனர். டூவீலரை சிறுவன் சிபிராஜா ஓட்டி சென்றார். அப்போது எதிர்திசையில் கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா கிரசர்மேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் வயது 38 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் சிபிராஜா ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு டூவீலர்களும் கீழே விழுந்ததில் டூவீலர்களில் பயணித்த மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்டு கவிப்பிரியா மற்றும் சிபிராஜாவை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், சக்தி வேலை திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கவிப்பிரியா அளித்த புகாரின் பேரில் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது க.பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.