கணவாய் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

கணவாய் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;

Update: 2025-10-22 11:57 GMT
கணவாய் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா பெரிய மஞ்சுவலி அருகே உள்ள வெள்ளையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி வயது 55. இவர் சனிக்கிழமை அன்று இரவு 7:30 மணி அளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் கணவாய் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா கணவாய் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி வயது 50 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற ரவி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரவியை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பெரியசாமியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரவி அளித்த புகாரில் டூவீலரை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெரியசாமி மீது அரவக்குறிச்சி காவல் துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News