பன்றி இறைச்சி கடை வைப்பதில் தகராறு - வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வேடசந்தூர் அருகே பன்றி இறைச்சி கடை வைப்பதில் தகராறு - வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு;

Update: 2025-10-22 12:34 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஐயப்பா நகரை சேர்ந்த ஜீவா(30), நாகம்பட்டி குடகனாறு ஓரப்பகுதியில் பன்றிகளை வளர்த்து வரும் இவர் பன்றி கறிக்கடையும் நடத்தி வருகிறார். மாரம்பாடியில் பன்றி கறிக்கடை போடுவதில் இவருக்கும் தாடிக்கொம்பை சேர்ந்த மூனீஸ்வரன்(31 )-க்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூனீஸ்வரன் சிலருடன் சேர்ந்து ஜீவாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த ஜீவா சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. மேற்படி சம்பவம் குறித்து வேடசந்துார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News