கரூர் -ராம் லோகு நகரில் மாரடைப்பால் உயிரிழந்த வாலிபர்.
கரூர் -ராம் லோகு நகரில் மாரடைப்பால் உயிரிழந்த வாலிபர்.;
கரூர் -ராம் லோகு நகரில் மாரடைப்பால் உயிரிழந்த வாலிபர். கரூர் ஆண்டாங் கோவில் கீழ்பாகம் ராம்லோகு நகர் சாய் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத் வயது 33. திங்கள் கிழமை காலை 11 மணியளவில் வீட்டிலிருந்தபோது ஹரிப்பிரசாத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஹரிபிரசாத்தின் மனைவி அக்க்ஷயா வயது 29 என்பவர் அளித்த புகாரில் கரூர் மாநகர காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.