உலக சமாதான ஆலயம் சார்பில் உலக அமைதி தின ஊர்வலம்

குமாரபாளையம் உலக சமாதான ஆலயம் சார்பில் உலக அமைதி தின ஊர்வலம் நடந்தது;

Update: 2025-11-09 14:48 GMT
உலக அமைதி தினம் நவ. 11ல் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. குமாரபாளையம் உலக சமாதான ஆலயம் சார்பில், உலக அமைதி தின விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பிருந்து துவங்கியது. பேரணியை ஞான ஆசிரியை சாந்திஸ்ரீ துவக்கி வைத்தார். முக்கிய வீதிகளின் வழியாக உலக சமாதான ஆலயத்தில் நிறைவு பெற்றது. உலக அமைதி வேண்டி தியானம் நடத்தப்பட்டது. இதில் வணிகர் சங்கம், அபெக்ஸ் சங்கம், விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பு, அன்னை காவேரி குடும்பம் உள்பட பலர் பங்கேற்றனர்

Similar News