தென்காசியில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை வாசிக்கும் நிகழ்ச்சி
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது;
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.11.2025) 76 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பின் முகவுரை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்து இந்திய அரசியலமைப்பின் முகவுரையை வாசித்தார் நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்