சுரண்டை அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது
அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது;
தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் முன்னிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட திமுக செயலாளர் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், நகர திமுக செயலாளர் ஆ.கணேசன் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால், நகராட்சி உறுப்பினர்கள் பள்ளி இருபால் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...