பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி திடீரென பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்தார்
சாணார்பட்டி போலீசாரை தொடர்பு கொள்ளவும்;
திண்டுக்கல் கோபால்பட்டியில் இருந்து நத்தம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி திடீரென பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்தார் உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இவரைப் பற்றிய தகவல் ஏதும் தெரிந்தால் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்