புதுக்கோட்டை, திருமயம் அடுத்த திராவிடங்கியில் குளத்தின் அருகில் பழமையான கல்வெட்டு கண்பிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் 1328ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உய்ய வந்தான் திருநோக்கு அழகிய தொண்டமானார் இவ்வூரை திருப்பெருந்துறை ஆளுடைய பரம சுவாமிக்கு திருவிடையாட்டமாக அளித்துள்ள செய்தி தெரியவருகிறது என புதுகையைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.