மதுராந்தகம் அருகே 15 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது
மதுராந்தகம் அருகே 15 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது;
மதுராந்தகம் அருகே 15 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கருங்குழி அடுத்த மேலவளம்பேட்டையில், வீட்டில் மருத்துவம் படிக்காத போலி மருத்துவர் ஒருவர், கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் திட்டமிட்ட குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகத்துக்கு புகார் வந்ததை அடுத்து.நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் தலைமையில், மேலவளம் பேட்டையில் உள்ள கிளினிக்கில் திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது, மூதாட்டி ஒருவருக்கு கிளினிக்கில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த இருந்த பிரகாஷ், 50, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலவளம்பேட்டையை சேர்ந்த பிரகாஷ், 50, என்பவர், 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவம் படிக்காமல், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, மதுராந்தகம் அடுத்த புழுதிவாக்கம் மற்றும் கருங்குழி பகுதியில் கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதும் தெரியவந்தது, மாவட்ட மருத்துவ நல பணிகள் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் மலர்விழி கொடுத்த புகாரின் பேரில் . மதுராந்தகம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.