வத்தலகுண்டு -ல் 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்து தலைமறைவாக இருந்த வாலிபர் போக்சோவில் கைது

மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து;

Update: 2025-11-29 02:37 GMT
திண்டுக்கல், வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததாக வத்தலகுண்டுவை சேர்ந்த சரவணன்(24) என்பவர் மீது நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணன் தேடி வந்தனர். இது குறித்து நிலக்கோட்டை DSP.செந்தில்குமார் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்தமிழ்செல்வி வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடசந்தூர் பகுதியில் பதுங்கி இருந்த சரவணன் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Similar News