ஓசி பீர்கேட்டு டாஸ்மாக் மேலாளருக்கு கொலை மிரட்டல் 2பேர் கைது

மயிலாடுதுறை இளந்தோப்பு டாஸ்மாக் கடையில் 2 பாட்டில் பீர் ஓசியில் கேட்டு கொடுக்க மறுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரவிக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று நபர்களில் இருவரைக் கைது செய்து சிறையில் அடைப்பு

Update: 2024-08-08 17:04 GMT
மயிலாடுதுறை அருகே உள்ள இளந்தோப்பு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் மேற்பார்வையாளராக நாகை பெருங்களத்தூர் ரவி (53) என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவதினத்தன்று இரவு 9:45 மணி அளவில் இளந்தோப்பு அருகே உள்ள வரதம்பட்டை சேர்ந்த ராஜ்மோகன் (22) விக்னேஷ் (28) மேலும் குறிச்சியை சேர்ந்த பிரசாந்த் ஆகியோர் மது வாங்கி அருந்திவிட்டு மீண்டும் கடைக்கு வந்து இரண்டு பீர் பாட்டில்களை கேட்டனர் அதற்கு பணம் கேட்டதற்கு, பணம் கொடுக்க முடியாதுஎன்றும் பாட்டில் கொடு என்று கேட்டு மிரட்டினர், மேலும் காலியான பீர் பாட்டிலை எடுத்து கடையில் அடித்தும் கொலை மிரட்டல் விடுத்தும் அவர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தும் தகராரில் ஈடுபட்டதால் டாஸ்மாக் கடைக்கு வந்த மற்ற நபர்கள் ஓடிவந்து கேட்ட போது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து ரவி டாஸ்மாக் மேல் அதிகாரிகளிடம் கூறிவிட்டு மணல்மேடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விக்னேஷ் மற்றும் ராஜ்மோகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரசாந்த் என்பவரை மணல்மேடு போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News