புதுப்பட்டி கோவில் தேர் திருவிழா: ராசிபுரம் அருகே கோவில் தேர் திருவிழாவின் போது 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு குற்றவியல் நீதிமன்றம்...
புதுப்பட்டி கோவில் தேர் திருவிழா: ராசிபுரம் அருகே கோவில் தேர் திருவிழாவின் போது 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு குற்றவியல் நீதிமன்றம்...;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி ஸ்ரீ துலுக்க சூடாமணி அம்மன் திருக்கோவிலானது அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தேர் திருவிழாவானது நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனபிரியா உள்ளிட்டோர் காலை 11 மணிக்கு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.இதில் ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரில் பின்புறம் பக்தர்கள் மஞ்சள், வெள்ளை நிறை ஆடைகளை அணிந்து கையில் வேப்பிலையுடன் உருளைத்தாண்டம் போட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்... இத்திருவிழாவின் போது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மற்றும் திருவிழாவின் போது நடைபெறும் திருட்டு,கொலை,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் நோக்கத்திற்காகவும் அங்கு நடைபெறும் குற்றங்களை விசாரித்து அன்றே தீர்ப்பு வழங்கும் நோக்கத்திற்காகவும் திருவிழாவின்போது ராசிபுரத்தில் இயங்கி வரும் குற்றவியல் நீதிமன்றமானது 2 நாட்கள் புதுப்பட்டியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பல வருடமாக இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற சிறப்பு நீதிமன்றத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு தலா 1000ரூபாய் வீதம் என 6000 ரூபாய் அபராதம் விதித்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோனபிரியா தீர்ப்பளித்தார். புதுப்பட்டி தேர் திருவிழாவின்போது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து குற்றவியல் சிறப்பு நீதிமன்றமானது செயல்படுவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோகன், சிவலீலா ஜோதி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள்,காவல் துறையினர் என பலர் உடன் இருந்தனர்...