குளத்தில் மண் அள்ளிய 2 டிராக்டர்களை பறிமுதல்
திண்டுக்கல் அருகே குளத்தில் மண் அள்ளிய 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த கனிமவளத்துறையினர்;
திண்டுக்கல், கனிமவளத்துறை உதவி இயக்குனர் செல்வ சேகர் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கனிமவள தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது குளத்துமண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது 2 டிராக்டரில் வந்த டிரைவர்கள் தப்பி ஓடினார்கள் மேலும் குளத்திலிருந்து டிராக்டரில் எடுத்து வரப்பட்ட மண்ணுக்கு நடை சீட்டு இல்லை என்பது தெரியவந்ததை தொடர்ந்து கனிமவளத்துறை அதிகாரிகள் மண்ணுடன் இருந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.