கோவை: விமானப் பயணம்- 25 ஏழை குழந்தைகளின் கனவு நனவானது !

கோவை, சென்னை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 25 ஏழை குழந்தைகளின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை ஒரு தனியார் அமைப்பு வழங்கியுள்ளது.;

Update: 2025-03-28 06:46 GMT
கோவை, சென்னை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 25 ஏழை குழந்தைகளின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை ஒரு தனியார் அமைப்பு வழங்கியுள்ளது. பிளைட் ஆஃப் பேண்டஸி என்ற திட்டத்தின் மூலம், இந்த குழந்தைகளுக்கு விமானப் பயணம் மற்றும் சென்னை நகரின் முக்கிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சுற்றுலாவில், குழந்தைகள் கோவையிலிருந்து நேற்று விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் சென்னை கோளரங்கம் மற்றும் அக்வாரியம் ஆகிய இடங்களுக்குச் சென்று அறிவியல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பற்றி அறிந்துகொண்டனர்.இந்தச் சுற்றுலாவில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக தன்னார்வலர்களும் மருத்துவமனை ஊழியர்களும் உடன் சென்றனர். இந்த முயற்சி, ஏழை குழந்தைகளின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News