மன்னம்பந்தல், மணக்குடி ஊராட்சியில் 3000 பனை விதை நடவு

ஒரு கோடி பனைவிதை நடவு திட்டம்  இரண்டு ஊராட்சிகளில் 3 ஆயிரம் பனை விதை நடவு

Update: 2024-09-29 16:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒரு கோடி பனை விதை நடவு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பனை விதை நடவு பணி தொடங்கியது.  மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பிரியா பெரியசாமி, மணக்குடி பெருவீரமணி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் வாய்க்கால் கரை பகுதிகளில் மூன்று அடி இடைவெளி விட்டு 3 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News