கம்பைநல்லூரில் 32 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

கம்பைநல்லூர் வாரச்சந்தையில் 32 லட்சத்திற்கு ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனை;

Update: 2025-08-02 02:04 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் ஆடு, நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக சிறப்பு வாரச்சந்தை நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற வாரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகளை விற்க & வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.5000 முதல் ரூ.11700 வரையும் நாட்டுக்கோழிகள் ரூ.350 முதல் ரூ.1250 வரை என நேற்று 32 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News