குளித்தலையில் தேசிய மக்கள் நீதிமன்றம் 377 வழக்குகளுக்கு உடனடி தீர்வு

ரூபாய் 6 கோடியே 85 லட்சத்து 20 ஆயிரம் உடனடி தீர்வு;

Update: 2025-09-13 11:12 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நீதிமன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி முத்துச்சாமி தலைமை வகித்தார். இதில் குடும்ப வழக்கு, வாகன விபத்து வழக்கு, சிவில் வழக்கு, ஜீவனாம்ச வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எடுக்கப்பட்டு 377 வழக்குகளுக்கு ரூபாய் 6 கோடியே 85 லட்சத்து 20 ஆயிரம் உடனடி தீர்வு ஏற்பட்டு அதற்கான நிவாரண உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி தமிழரசி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி யுகாதிமரியா, குற்றவியல் நடுவர்கள் சசிகலா, ஸ்ரீ ராம், வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சரவணன், அரசு வக்கீல் நீலமேகம், முன்னாள் வக்கீல் சங்க செயலாளர் நாகராஜன், வழக்கறிஞர் திராவிட மணி மற்றும் வழக்காடிகள், நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News